251.எப்படித்தான் கூறுவேன்(எங்கிருந்தோ ஆசைகள்)**



எப்படித்தான் கூறுவேன் எங்கென்று நான் தேடுவேன்
இன்னதென்றொன்றும் புரியாமலே நான் நான் இங்கு வாடுறேன்
(SM)
எப்படித்தான் கூறுவேன் எங்கென்று நான் தேடுவேன்
இன்னதென்றொன்றும் புரியாமலே நான் நான் இங்கு வாடுறேன்
(MUSIC)
நான் நான் என எழுது எண்ணம் எழுது
ஏன் ஏன் அது பழுது என்னும் பொழுது
நான் நான் என எழுது எண்ணம் எழுது
ஏன் ஏன் அது பழுது என்னும் பொழுது
ஆயிரம் கேள்விகள் ஆறெனப் பெருகும்
யாரெவெர் பதில்-தர என-மனம் துடிக்கும்
என்றைக்கு விளங்கிடுமோ ..!
(SM)
எப்படித்தான் கூறுவேன் எங்கென்று நான் தேடுவேன்
இன்னதென்றொன்றும் புரியாமலே நான் நான் இங்கு வாடுறேன்
(MUSIC)
காலை எழும்பொழுதே எழும்பொழுதே
எனோ என வருதே எண்ணம் வருதே
காலை எழும்பொழுதே எழும்பொழுதே
எனோ என வருதே எண்ணம் வருதே
நேற்றினைப் போல எந்நாளும் இன்றிருக்க
இல்லை-பெரும் மாற்றமும் என-எனக்கிருக்க
என்றைக்கு உய்விருக்கோ ..!
இப்படியே போகுமோ என்றைக்கு-நன்..றாகுமோ
ஐயஹோ சொல்லத்தெரியாமலே அழுதழுதே-நான் ஏங்கினேன்
எப்படித்தான் கூறுவேன் எங்கென்று நான் தேடுவேன்
இன்னதென்றொன்றும் புரியாமலே நான் நான் இங்கு வாடுறேன்



Comments