237.எதுவரை தொடர்ந்து அலைக்கழிப்பாய்(மதுரையில் பறந்த மீன் கொடியை) **

 

எதுவரை தொடர்ந்து அலைக்கழிப்பாய் நீ உரைத்திடுவாய் நெஞ்சே
பாரில் துடிப்புடன் அலைந்து திரிந்திருக்காயே நிறுத்திடுவாய் இன்றே
(sm)
எதுவரை தொடர்ந்து அலைக்கழிப்பாய் நீ உரைத்திடுவாய் நெஞ்சே
பாரில் துடிப்புடன் அலைந்து திரிந்திருக்காயே நிறுத்திடுவாய் இன்றே

திங்களை அணிந்த சிவபெருமானை நினைத்திடுவாய் நெஞ்சே (2)
எனை நாளுமெப் போதும் துளைத்தேடுக்காமே அமர்ந்திவாய் இன்றே 
நெஞ்சே  அமர்ந்திவாய் இன்றே
எதுவரை தொடர்ந்து அலைக்கழிப்பாய்-நீ உரைத்திடுவாய் நெஞ்சே
பாரில் துடிப்புடன் அலைந்து திரிந்திருக்காயே நிறுத்திடுவாய் இன்றே
(MUSIC)

சாந்தி நிலவும் கோவில் எனத்தான் சென்றதையே நீ கண்டிலையோ ஓ 
சாந்தி நிலவும் கோவில் எனத்தான் சென்றதையே நீ கண்டனையோயோ
நிஜத்தினைக் காணும் குணத்தினை நீயும் ஒருகணமேனும் கொண்டனையோ 
ஜாலத்தைப் புரியும் மோகத்தில் எதையோ தேடினையே நீ அடைந்தனையோ 
பார்த்து முடிவில் சோர்ந்து உடலில் வலியினையே நீ கொண்டிலையோ
வலியினையே நீ கொண்டிலையோ
எதுவரை தொடர்ந்து அலைக்கழிப்பாய் நீ உரைத்திடுவாய் நெஞ்சே
பாரில் துடிப்புடன் அலைந்து திரிந்திருக்காயே நிறுத்திடுவாய் இன்றே
(MUSIC)

நடக்கும் வழியில் தடுக்கும் கல் போல் என்-மனமே நீ இருந்தனையோ
எரியும் நெருப்பில் கொழுந்து விட்டே  எழுமாசைத் தீ போதலையோ
தேவைகள் எனவும் கணந்தொறும் கிளரும் சேற்றினில் தான் உன் காலிருக்கோ
எதிரினில் வாடும் என்னிடம் ஈரம் என் மனதே நீ  கொண்டிலையோ 
எனை நாளுமெப்போதும் துளைத்தேடுக்காமே அமர்ந்திவாயே நீ இன்றே 
எதுவரை தொடர்ந்து அலைக்கழிப்பாய்-நீ உரைத்திடுவாய் நெஞ்சே
பாரில் துடிப்புடன் அலைந்து திரிந்திருக்காயே நிறுத்திடுவாய் இன்றே


முதல் பக்கம் Part II


Comments