230.வாழ்விலே துன்பமா (மௌனமே பார்வையால்) **

 

வாழ்விலே துன்பமா நீ எழுச்சி கொள்ள வேண்டும்
ஊழ்வினை போகுது என மகிழ்ச்சி கொள்ள வேண்டும்
(SM)
வாழ்விலே துன்பமா நீ எழுச்சி கொள்ள வேண்டும்
ஊழ்வினை போகுது என மகிழ்ச்சி கொள்ள வேண்டும்
(MUSIC)

பள்ளிகளிலே இதைச் சொல்லித் தரவே ஒரு 
நல்ல காலம் மண்ணில் வரவேண்டும் வரவேண்டும்
(SM)
பள்ளிகளிலே இதைச் சொல்லித் தரவே ஒரு 
நல்ல காலம் மண்ணில் வரவேண்டும்
பிஞ்சு மனத்தில் வரும் அஞ்சுதலையும் 
இறை உணர்வு கொண்டு நீக்கிட வேண்டும்
இறைக்கல்வி தன்னை அவர் பெறவேண்டும்
பார்.. வாழ்விலே துன்பமா நீ எழுச்சி கொள்ள வேண்டும்
ஊழ்வினை போகுது என மகிழ்ச்சி கொள்ள வேண்டும்
(MUSIC)

சொத்து சுகமாய் நீ பண்பை நினைப்பாய் 
எனச் சொல்லியூட்டும் திடம் வர வேண்டும் வர வேண்டும்
(SM)
சொத்து சுகமாய் நீ பண்பை நினைப்பாய் 
எனச் சொல்லியூட்டும் திடம் வர வேண்டும் 
பெண்களும் பணம் சென்று தேடும் நிலையை விட்டு
 குடும்பம் பேணும் நிலை வரவேண்டும்
அவர் பெண்களாகும் நிலை வரவேண்டும்
பார்.. வாழ்விலே துன்பமா நீ எழுச்சி கொள்ள வேண்டும்
ஊழ்வினை போகுது என மகிழ்ச்சி கொள்ள வேண்டும்


முதல் பக்கம் Part II


Comments