221 மந்திரங்கள் நானறியேன்(அந்தரங்கம் நானறியேன்) ** ஏட்டுக்கல்வி

மந்திரங்கள் நானறியேன் தந்திரம் புரிந்திலனே…  
மந்திரங்கள் நானறியேன் தந்திரம் புரிந்திலனே
எந்திரம் போல்  பண்படித்தேன் ஒன்றுமில்லை என்திறனே (2)
எந்தன் பணி கூறுவதே என்பதனை நீயறிவாய் 
எந்தன் பணி வாய் பேச்சே என்பதனை நீயறிவாய்
மந்திரங்கள் நானறியேன் ஒன்றுமில்லை என்திறனே …
( MUSIC)

பாரில்-பல காண்பதற்கே ஓடிச்சென்ற கண்கள்
நிஜம்  காணவென்றே நானுமிங்கே பாடுகின்ற பண்கள்
(2)
அறிந்தவைகள் ஆயிரம்தான் ஐயமில்லை ஆனால் (2)
புரிந்தவையோ அணுவுமில்லை நானிருக்கேன்  மானாய்
எந்தன் திறமா ?
உண்மை அல்லம்மா
இன்னும் சொல்லவா
நன்மை என்னம்மா
மந்திரங்கள் நானறியேன் ஒன்றுமில்லை என் திறனே
(MUSIC)

ஆ வரையில் இரண்டெழுத்தே கற்றறிந்த பின்னே
அதைப் பார் முழுதும் கூறிடுமே நானுமந்த பிள்ளை 
(2)
அறிந்தேனே கடுகளவு அதை மலையைப் போலும்
உரைத்தேனே கடுகளவு அதை மலையைப் போலும்
நினைத்து அதில் நல்லதை உம் தாய் உளமே காணும் 
எந்தன் திறமா ?
உண்மை அல்லம்மா
இன்னும் சொல்லவா
நன்மை என்னம்மா
மந்திரங்கள் நானறியேன் ஒன்றுமில்லை என்திறனே
மந்திரங்கள் நானறியேன் ஒன்றுமில்லை என்திறனே
 


முதல் பக்கம் Part II








Comments