213 கிடந்து ஒரு கோலம்(மலர்ந்தும் மலராத) **






கிடந்து ஒரு-கோலம் நின்று ஒருகோலம் என்று எழிலாகவே
கொண்டு பாரில் அருள்-கூர்ந்த வரத-நீ-தூங்கு நீரில் களைப்பாறவே
நதியில் வரும்-வெள்ளம் கடலில் அலைமோதும் அமைதி அதில்-இல்லையே
என அனந்த சரஸ்-என்னும் குளத்தின் உள்-சென்று ஓய்வு பெறும் ஐயனே
(SM)
கிடந்து ஒரு-கோலம் நின்று ஒருகோலம் என்று எழிலாகவே
கொண்டு பாரில் அருள்-கூர்ந்த வரத-நீ-தூங்கு நீரில் களைப்பாறவே
நதியில் வரும்-வெள்ளம் கடலில் அலைமோதும் அமைதி அதில்-இல்லையே
என அனந்த சரஸ்-என்னும் குளத்தின் உள்-சென்று ஓய்வு பெறும் ஐயனே
(MUSIC)
வேளைக்கொன்றென்று கோலம் பல கொண்டு
ஆட்சி புரிந்தாய்  ஐயா எழில் காட்சி கொடுத்தாய் ஐயா
முழு நேரப் பொழுதுந்தன் வேலை அதுவென்று
ஆட்சி புரிந்தாய்  ஐயா காட்சி கொடுத்தாய் ஐயா
 முழு நேரப் பொழுதுந்தன் வேலை அதுவென்று
முழு நேரப் பொழுதுந்தன்
வேலை அதுவென்று
காட்சி கொடுத்தாய் ஐயா
(SM)
நிற்க-முடியாமல் நடக்க-முடியாமல் ஜனங்கள் பலர்-வாடுவார்
பக்த ஜனங்கள் பலர்-வாடுவார்
எனினும் அன்பின் வடிவானத் தந்தை உனைக்காண மனதில் உரம்-பூணுவார் வரிசை தனில்-கூடுவார்
எனினும் அன்பின் வடிவானத் தந்தை உனைக்காண
எனினும் அன்பின் வடிவான..
தந்தை உனைக்காண ..
வரிசை தனில்-கூடுவார்
(MUSIC)
நதியில் வரும்-வெள்ளம் கடலில் அலைமோதும் அமைதி அதில்-இல்லையே
என அனந்த சரஸ்-என்னும் குளத்தின் உள்-சென்று ஓய்வு பெறும் ஐயனே
(MUSIC)
கண்கள் காணாது எளிதில் பூக்காது அத்திப் பூவல்லவா
உலகில் அதுபோல எளிதில்-தோன்றாத தெய்வம் நீயல்லவா
அத்திப் பூ போன்றவா

உன்னை தினம்-காண கவலை பல-போக மறந்து இருந்தோமய்யா
நீ கண்ணில் தெரியாமல் மறைந்து இருந்தாலும் மறக்க முடியாதய்யா
உன்னை மறக்க முடியாதய்யா 
ம்..ம்..
அத்தி வரத ஆ..ராரோ ஆரி ரா ராரோ ஆரி ரா ரா ரிரோ
அத்தி வரத ஆராரிரோ (2)



Comments

  1. ஒவ்வொன்றும் முத்துக்கள்

    ReplyDelete

Post a Comment