152 ஆலயம் நெஞ்சே என்றானால்(மலருக்குத் தென்றல்) **



Click here for the Audio

நாள் முழுதும் ஞாலகமே என அலையும் என் மனமே
ஆண்டவனை  பூமியிலே ஆசையுடன் தேடாதே  
________________

ஆலயம் நெஞ்சே என்றானால் அதில் இறைவனைக் கண்டிட வழி பாரு
(1+SM+1)
*கல்லினுள்-இறைவன் உண்டானால்-அவன் உன்னுள்ளும்-உண்டே நீ தேடு
ஆலயம் நெஞ்சே என்றானால் அதில் இறைவனைக் கண்டிட வழி பாரு
(MUSIC)
இருட்டுக்குப்-பிறகு ஒளியானால் இருள் மனது-உன்னிடம் ஒளியுமுண்டு
இருட்டுக்குப்-பிறகு ஒளியானால் இருள் மனதில் இறை-ஒளி என்றும்-உண்டு
விடத்துக்கு-நஞ்சே மருந்தானால்- நெஞ்சே உனை-விட உனக்கென மருந்தேது
இறை-அவதாரம் உண்டானால் அதும் மனிதனைப்-போலே எனத்-தேறு
ஆலயம் நெஞ்சே என்றானால் அதில் இறைவனைக் கண்டிட வழி பாரு
(MUSIC)
#அணுவுக்கும்-உள்ளே உலகானால் நெஞ்சு உனக்குள்ளும்-பாரேன் உலகம் ஒன்று
(2)
**கனலுக்குள்-நீரே உண்டானால்-நெஞ்சு உனக்குள்ளும் இறைப்-பொறி என உண்டு
ஆலயம் நெஞ்சே என்றானால் அதில் இறைவனைக் கண்டிட வழி பாரு
(MUSIC)
கண்ணுக்குள்-பார்வை உண்டானால்-இறை நினைப்பாய் மனது-உன் உள்ளுமுண்டு
***பெண்ணுக்கு உள்ளும் ஆணானால் உந்தன் பெண்மைக்கு உள்ளும் ஆண்மை உண்டு + (SM)
ஆலயம் நெஞ்சே என்றானால் அதில் இறைவனைக் கண்டிட வழி பாரு
கல்லினுள்-இறைவன் உண்டானால்-அவன் உன்னுள்ளும்-உண்டே நீ தேடு
ஆலயம் நெஞ்சே என்றானால் அதில் இறைவனைக் கண்டிட வழி பாரு


#அணுவுக்கும்-உள்ளே உலகானால்=Micro Universe (Quantum mechanics)
* கல்லிலும் (கற்சிலையிலும்) கடவுள் உண்டானால் , கல்லான என் நெஞ்சே கவலை விடு . உன்னுள்ளும் அவன் உண்டு
**கனலுக்குள் நீரே உண்டானால்=சூரிய வெப்பம் நீரை ஆவியாகச் செய்து மேகமாக்குகிறது. கனலுக்குள் நீர் தான் நீராவி

***பெண்ணுக்கு உள்ளும்=ஆண் மகவானாலும் அது பெண் வயிற்றில் தான் பிறக்கிறது. ஆண்கள் ஆண் வயிற்றிலும் பெண்கள் பெண் வயிற்றிலும் பிறப்பதில்லை. அது போல , நெஞ்சே நீ ஒரு பெண் என்றாலும் (புருஷ சுக்தத்தின் படி இறைவன் ஒருவனே புருஷன்,மற்ற ஜீவன்கள் பெண்களே), புருஷனாகிய இறைவன் உனக்குள் உண்டு. கவலை விடு. அவனைத் தேடு.  


முதல் பக்கம் Part II

Comments