118. எல்லாந்தான் செஞ்சேன்(பிச்சாண்டி தன்னைக் கண்டு)




எல்லாந்தான் செஞ்சேன்-பலன் ஒண்ணுமில்லீங்க-ஐயோ 
உண்டியில்-நான் போட்டதுக்கோர் எல்லை-இல்லீங்க 
(1+SM+1)
சாமி-படம் ஒண்ணு-ரெண்டு..இன்னு-இல்லீங்க (2)
பல நூறு-படம் கொண்டது-என் பூஜை-அறைங்க (2)
எல்லாந்தான் செஞ்சேன்-பலன் ஒண்ணுமில்லீங்க-ஐயோ 
உண்டியில்-நான் போட்டதுக்கோர் எல்லை-இல்லீங்க
(MUSIC)
எத்தனை முறை-பூஜை செஞ்சுப்புட்டேங்க 
எப்போதும் ஒரு-போதில் நஞ்சுப்புட்டேங்க
(1+Very Short Music+1)
அக்கினியில் பொன்-பொருளைக் கொட்டிப்புட்டேங்க 
அதை வட்டிக்கு-நான் வாங்கிக்-கடன் பட்டுப்புட்டேங்க
அய்யா வட்டிக்கு-நான் வாங்கிக்-கடன் பட்டுப்புட்டேங்க
எல்லாந்தான் செஞ்சேன்-பலன் ஒண்ணுமில்லீங்க-ஐயோ 
உண்டியில்-நான் போட்டதுக்கோர் எல்லை-இல்லீங்க 
(MUSIC)
ஆண்டவன் தன்னின்-பெயர் சொல்லியே-கேட்டார் 
ஆண்டி என்றே-கொடுத்தே ஆகினேன்-முட்டாள்
சாத்திரங்கள் சொல்லவில்லை செய்த-பாவம்
தனைப் போக்கப்-பணம் என்று-சொல்லும் பரிகாரம்
பவம் போக்கும்-பணம் என்று-சொல்லும் பரிதாபம்
எல்லாந்தான் செஞ்சேன்-பலன் ஒண்ணுமில்லீங்க-ஐயோ 
உண்டியில்-நான் போட்டதுக்கோர் எல்லை-இல்லீங்க 
(MUSIC)
படைத்ததெல்லாம்-தானே அருந்திடுவார் 
அந்த மாலோலன் உண்ணத்-தந்தான் என்று-கதைப்பார்
(2)
தந்தவன் நான் எனையே கெஞ்..சச் செய்வார் 
இன்னும் பலபூஜை உண்டு-என்று வஞ்சனை செய்வார்
இன்னும் பலபேசி என்-பணத்தை உறிஞ்சிக் கொள்வார்
எல்லாந்தான் செஞ்சேன்-பலன் ஒண்ணுமில்லீங்க-ஐயோ 
உண்டியில்-நான் போட்டதுக்கோர் எல்லை-இல்லீங்க 




Comments