112. நம் வாழ்வினிலே(ஒரு தாய் வயிற்றில்)



நம் வாழ்வினிலே தினம் இறைவன் பெயர் 
ஒரு தரம்-உரைத்தால் நமக்கு உயர்வு-வரும்
(2)
பெரிய கடல்-கடக்கும்-அந்த படகினுக்கும் சிறு துடுப்பினில்-தான் நகரும் திறன்-பிறக்கும்
நம் வாழ்வினிலே தினம் இறைவன் பெயர் 
ஒரு தரம்-உரைத்தால் நமக்கு உயர்வு-வரும்
(MUSIC)
நாளும்-அதிகாலை விழித்து எழும்-போதே கவலை வந்தாடுமே 
பிறகு பலவேலை உலகில்-உறவாகிப் பிரித்து உனை-மேயுமே
(2)
என்று-தான் நிம்மதி கொண்டு-நான் வாழலாம்
என்றே சொல்லும்-தம்பி இறைவன்-பேரைச் கூறடா 
நம் வாழ்வினிலே.. தினம் இறைவன் பெயர் 
ஒரு தரம்-உரைத்தால் நமக்கு உயர்வு-வரும்
(MUSIC)
தினமும் ஒருபாதை கணமும் ஒரு-போதை என்று-அலைகின்றது 
உடலை-நிஜமென்ற நினைப்பு-உருவாகி மனது கலைகின்றது
(2)
உண்ணுவோம் உறங்குவோம் என்பதே வாழ்க்கையா
தம்பி ராம ராம்-ராம் என்னும் சொல்லே மெய்யடா
 நம் வாழ்வினிலே தினம் இறைவன் பெயர் 
ஒரு தரம்-உரைத்தால் நமக்கு உயர்வு-வரும்
(MUSIC) 
மனது-தளராதே நாமம்-உனைக்காக்கும் என்று-அறிவாயடா 
தருமம் ஒருபோதும் மறைந்து-அழியாது திரும்ப வரும்-ஆமடா
(2)
என்று-நம் கண்ணனும் சொன்ன-சொல் நம்பணும்
ராம்-ராம் என்று-சொல்லி வாழ்வில் பண்பாய்-இருக்கணும்
ராமன் வாழ்க்கைச்  சேதி உந்தன் வாழ்வில் ஒலிக்கணும் 

நம் வாழ்வினிலே தினம் இறைவன் பெயர் 
ஒரு தரம்-உரைத்தால் நமக்கு உயர்வு-வரும்
பெரிய கடல்-கடக்கும்-அந்த படகினுக்கும் 
சிறு துடுப்பினில்-தான் நகரும் திறன்-பிறக்கும்
நம் வாழ்வினிலே தினம் இறைவன் பெயர் 
ஒரு தரம்-உரைத்தால் நமக்கு உயர்வு-வரும்







Comments