52. ஆண்டவன் உலகத்தில்(ஆண்டவன் உலகத்தின் முதலாளி)

 

 
 
* ஆண்டவன் உலகத்தின் முதலாளி) (* இறையவதாரம் )
 
ஆண்டவன் உலகத்தில் பிறந்தானே

அவனொரு மானிடன் எனத் தானே
மண்ணில் உலவி நம்மைப் போலே
அனுதினம் குலவிச் சிரித்தானே
(2) + (MUSIC)
உலகெனும்-நாடக மேடையைப் படைத்து
நமக்கென நடித்தவன் அவன் தானே
(2)
எனக்கு நான்-என வா..ழும் உலகை
மாற்ற வந்தவன் அவன் தானே

ஆண்டவன் உலகத்தில் பிறந்தானே
அவனொரு மானிடன் எனத் தானே
மண்ணில் உலவி நம்மைப் போலே
அனுதினம் குலவிச் சிரித்தானே
(MUSIC)

தன்னை உணராமல் வாழும் உலகோரின்
மனதில் மெதுவாய் மாற்றம்
(2)
தனை செய்தவர் ஞான ஒளியின் அருள் கூட்டும்
சத்தியம் அவனே ஆகும்

யாக்கை என்றொரு உறையினிலே
ஒரு சுடராய்த் தானே இருக்கிறதை
(2)
யோகத்தில் உணர்வாய் அவன் கொடுப்பான்
அந்த சாதனை..யில்-குரு அவன் தானே

ஆண்டவன் உலகத்தில் பிறந்தானே
அவனொரு மானிடன் எனத் தானே
மண்ணில் உலவி நம்மைப் போலே
அனுதினம் குலவிச் சிரித்தானே
 
 



Comments