36. ஒன்பதிலே தெரிவதில்லை(கோபியரே .. கோபியரே)

(#** கோபியரே .. கோபியரே) (* க்ருஷ்ண கானம் ) (* இறை தேடல்)


ஒன்பதிலே தெரிவதில்லே எண்பதிலே பயனுமில்லே
இடையினிலே வாழ்க்கையிலே எதற்குமந்த நேரமில்லே
இடையினிலே வாழ்க்கையிலே எதற்குமந்த நேரமில்லே
(1+MUSIC+1)
வேந்தனுக்கும் மனதினிலே நிம்மதியின் மகிழ்ச்சி இல்லை
ஊ..ணில்..லா ஏழையர்க்கும் அதுவே தான்வேறு இல்லை
ஊணில்லா ஏழையர்க்கும் அதுவே தான் வேறு இல்லை
வேந்தனுக்கும் மனதினிலே நிம்மதியின் மகிழ்ச்சி இல்லை
ஊ..ணில்..லா ஏழையர்க்கும் அதுவே தான் வேறு இல்லை

ஒன்பதிலே தெரிவதில்லே எண்பதிலே பயனுமில்லே
இடையினிலே வாழ்க்கையிலே எதற்குமந்த நேரமில்லே
இடையினிலே வாழ்க்கையிலே எதற்குமந்த நேரமில்லே
(MUSIC)

ஒன்றுமிலா மனதினிலே குழந்தைகளும் ஆடிடுதே
அந்த நிலை பெற்றுவிட மனதும் நல்லா ஏங்கிடுதே
அந்த நிலை பெற்றுவிட மனதும் நல்லா ஏங்கிடுதே

ஒன்றுமிலா மனதினிலே குழந்தைகளும் ஆடிடுதே
அந்த நிலை பெற்றுவிட மனதும் நல்லா ஏங்கிடுதே


அன்னை மடி இல்லை எனில் ஊராரின் பிள்ளையென
கண்டிடுவோர் முகம் பார்த்து மகிழ்வாகச் சிரிக்கிறதே
கண்டிடுவோர் முகம் பார்த்து மகிழ்வாகச் சிரிக்கிறதே

அன்னை மடி இல்லை எனில் ஊராரின் பிள்ளையென
கண்டிடுவோர் முகம் பார்த்து மகிழ்வாகச் சிரிக்கிறதே
ஒன்பதிலே தெரிவதில்லே எண்பதிலே பயனுமில்லே
இடையினிலே வாழ்க்கையிலே எதற்குமந்த நேரமில்லே
இடையினிலே வாழ்க்கையிலே எதற்குமந்த நேரமில்லே
(MUSIC)

நேரமில்லை என்று-தினம் வாடுவதில் பயனுமில்லை
வாழ்க்கையிலே தேடுதலே துன்ப-அலை போக்க விலை
வாழ்க்கையிலே தேடுதலே துன்ப-அலை போக்க விலை
நேரமில்லை என்று-தினம் வாடுவதில் பயனுமில்லை
வாழ்க்கையிலே தேடுதலே துன்ப-அலை போக்க விலை
நாடிவிழும் வேளை தனில் சங்கரனே என்னும் நிலை
கொண்டு விட்ட மானிடர்க்கு போக்..கிடம் ஏதுமிலை
கொண்டு விட்ட மானிடர்க்கு போக்கிடம் ஏதுமிலை
நாடிவிழும் வேளை தனில் சங்கரனே என்னும் நிலை
கொண்டு விட்ட மானிடர்க்கு போக்கிடம் ஏதுமிலை

ஒன்பதிலே தெரிவதில்லே எண்பதிலே பயனுமில்லே
இடையினிலே வாழ்க்கையிலே எதற்குமந்த நேரமில்லே
இடையினிலே வாழ்க்கையிலே எதற்குமந்த நேரமில்லே



Comments